ஆபரேஷன் சிந்தூர்: எப்-16 சுட்டு வீழ்த்தப்பட்டதா? — பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா அறிவிப்பு – AthibAn Tv

0

ஆபரேஷன் சிந்தூர்: எப்-16 சுட்டு வீழ்த்தப்பட்டதா? — பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா என்ற கேள்விக்கு, அதைப் பற்றி பாகிஸ்தானிடம் விசாரிக்குமாறு அமெரிக்கா பதிலளித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில், அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உட்பட பல போர் விமானங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, சமீபத்தில் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் எப்-16 ரகமும் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒரு தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவின் தகவல் சுதந்திர சட்டம் (FOIA) கீழ், அந்நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையிடம் சில கேள்விகளை முன்வைத்தது. அதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எப்-16 ரக விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்களும் அடங்கும்.

ஆனால், அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க அமெரிக்கா மறுத்ததோடு, இதுகுறித்து நேரடியாக பாகிஸ்தான் அரசிடம் கேட்குமாறு அறிவித்துள்ளது.