பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ – வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை
பயங்கரவாதத்திற்கு எதிரான மனித சமூகத்தின் போரில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணமாக திகழ்கிறது. பாதுகாப்புத் துறையில், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்தது என்று சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.
79-வது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டின் மக்களுக்கு வழங்கிய உரை:
“சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, உலகளவில் ஏராளமான வாக்காளர்களைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளோம். இந்திய மக்களாகிய அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்குவது நம் கடமை. பிற ஜனநாயக நாடுகளில் வாக்களிக்கும் மக்களைப் போல அல்லாமல், பாலினம், மதம் மற்றும் பிற காரணிகளின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், சகிப்புத்தன்மையைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
முந்தைய கால ஜனநாயக நடைமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இயற்கையாகவே நம் நாட்டின் ஜனநாயக அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக அளவில் இந்தியா மிகப் பழமையான குடியரசு நாடாகும். ஜனநாயகத்தை மதித்து நடப்பதே சரியான வழிமுறையாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு ஜனநாயக அமைப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தியுள்ளோம். இவை அனைத்துக்கும் மேலாக, நமது அரசியலமைப்புச் சட்டமும் ஜனநாயக நடைமுறைகளும் பெருமை அளிக்கக் கூடியவை.
கடந்த காலங்களை உற்று நோக்கும்போது, நாட்டின் பிரிவினை நமக்கு மிகப் பெரிய மனவேதனையை அளித்தது. இன்று பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடு பிரிக்கப்பட்ட போது, கடும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன; லட்சக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். வரலாற்றில் இடம் பெற்ற இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.
இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி பயணிக்கும் போது, அதன் இலக்கை எட்டுவதற்கான நம்பிக்கையுடன் முன்னேற்றம் அடைகிறது. பொருளாதாரத்துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த ஆண்டு, நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5% ஆக இருந்தது; உலகளவில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போதும், நாட்டின் உள்நாட்டுப் தேவைகள் அதிகரித்துள்ளன.
பண வீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளது; நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கிறது. பொருளாதாரத்திற்கான முக்கிய குறியீடுகள் ஆரோக்கியமான வளர்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளன. இது, கவனமாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சிறந்த பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளால் சாத்தியமானது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பும் இதற்கு முக்கிய காரணமாகும்.
சிறந்த நிர்வாக நடைமுறைகளால் ஏராளமான மக்கள் வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் வறுமை பிடியிலிருந்து விடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் விளிம்புநிலையில் இருந்தாலும், அரசு வறிய நிலைக்கு செல்வதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
டிஜிட்டல் யுகத்தில், தகவல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 4ஜி மொபைல் சேவைகள் கொண்ட இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன; சில ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு விரைவில் இணைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. டிஜிட்டல் வளர்ச்சி பரிவர்த்தனைகளுக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவுகிறது.
இந்த வளர்ச்சி இந்தியாவை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக முன்னணியில் கொண்டுவருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்கிறது. உலகளவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், பெரும்பாலானவை இந்தியாவில் நடைபெறுகின்றன. இதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் மேம்படுகிறது; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு தோறும் சீரான வளர்ச்சி பெறுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேம்பட்ட நிலையில் உள்ளது. நாடு பல நிலைகளை எட்டியுள்ளது. இந்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேவைகளுக்கு தீர்வுகளைச் செய்யும் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
2047-ம் ஆண்டுக்குள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலக மையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இது உதாரணமாக உள்ளது.
சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம், வர்த்தகம் மற்றும் வாழ்க்கை எளிதாக்கப்பட வேண்டும். வளர்ச்சி விளிம்புநிலை மக்களுக்கு உதவும் போதும், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் போது மட்டுமே சாத்தியமாகும். அனைத்து துறைகளிலும் தற்சார்பு அதிகரிக்கிறது. இது நமது தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
இளையோர்களின் மனதால் நமது விண்வெளித் திட்டம் விரிவடைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஷுபான்ஷு சுக்லா மேற்கொண்ட பயணம் தலைமுறையினரை கனவுகளைக் காண தூண்டியுள்ளது. இது இந்தியாவின் விண்வெளித் திட்டமான ககன்யாவிற்கு உதவும்.
நமது இளைஞர்கள் விளையாட்டுகளில் முன்னேறுகின்றனர். சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞர்கள் முன்பு இல்லாத அளவு ஆதிக்கம் செலுத்துகின்றனர். தேசிய விளையாட்டு கொள்கை 2025-ல், இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்ற அறிவித்துள்ளோம்.
நமது மகள்கள் பெருமை. அவர்கள் ராணுவம், பாதுகாப்பு துறைகள் மற்றும் பிற துறைகளில் சாதிக்கின்றனர். விளையாட்டு திறன், அதிகாரம் மற்றும் வலிமையின் குறியீடாகும். பத்தொன்பது வயது பெண்ணும், முப்பத்தெட்டு வயது பெண்ணும் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இது பெண்களின் திறனை உலகளவில் காட்டுகிறது.
இந்த ஆண்டு பயங்கரவாதத்தின் கொடுமையை எதிர்கொண்டோம். காஷ்மீரில் அப்பாவி மக்களை கொன்றது மனிதநேயமற்றது. இந்தியா உறுதியுடன் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் எடுத்துக்காட்டியது நமது பாதுகாப்பு படைகள் எப்போதும் தயாராக உள்ளதை. உத்தி, தொழில்நுட்ப திறன் மூலம் எல்லையில் பயங்கரவாத முகாம்களை அழித்தனர்.
நமது ஒற்றுமை நமது பதிலடியில் முக்கியம். இது நம்மைப் பிரிக்க விரும்பியவர்களுக்கு பதிலடியாகும். பல நாடுகளுக்கு பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல கட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் சோதனைக் களமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. நமது பாதை சரியானது என்பதை இது நிரூபித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி, பல பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்ய முக்கியமாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகான பாதுகாப்பு வரலாற்றில் இது மகத்தான சாதனை” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.