கேரள அரசு–ஆளுநர் மோதல்: துணைவேந்தர் நியமனத்துக்கு தேடல் குழுவை உச்ச நீதிமன்றம் அமைப்பு – AthibAn Tv

0

கேரள அரசு–ஆளுநர் மோதல்: துணைவேந்தர் நியமனத்துக்கு தேடல் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கிறது

துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்த கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடர்ந்த வழக்கும், அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தரை ஆளுநர் நியமித்ததை எதிர்த்து, கேரள அரசு தொடர்ந்த வழக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், யுஜிசி விதிமுறைகளின்படி துணைவேந்தர் தேடல் குழுவில் 3 அல்லது 5 பேர் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர். ஆனால், எந்த விதியிலும் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை என்பதை மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, நீதிபதிகள் தெரிவித்ததாவது:

“ஆளுநர்–மாநில அரசு இடையிலான நிலவும் பிரச்சினைகளின் காரணமாக, கேரள துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவை உச்ச நீதிமன்றமே அமைக்கும். மாநில அரசும் ஆளுநரும் தலா 4 பேரின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைகளின் பட்டியல் கிடைத்த பிறகு, வழக்கு நாளை (ஆகஸ்ட் 14) மீண்டும் விசாரிக்கப்படும்.”