மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேரை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்வுக்கு உச்சநீதிமன்றம் இடைநிறைவு தடை!

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேரை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்வுக்கு உச்சநீதிமன்றம் இடைநிறைவு தடை!

2006-ஆம் ஆண்டு மும்பை புறநகர் ரயில்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 189 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, அதில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ததில், மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனைத்து 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்வுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின் போது, உயர்நீதிமன்றம் அளித்த விடுதலை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் பதிலளிக்க 12 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தற்போது விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எந்தவித உத்தரவையும் உச்சநீதிமன்றம் வழங்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன