ரஜினி சுயசரிதை எழுதுவதை உறுதிப்படுத்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார் என்பது குறித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக உறுதிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி–லோகேஷ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விளம்பரப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படத்தைப் பற்றி அளித்த பேட்டியில், ரஜினி தனது சுயசரிதை எழுதிக் கொண்டிருப்பது குறித்து லோகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், ரஜினி சுயசரிதை எழுதுகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தாலும், அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதியும் வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது லோகேஷ் சொல்வதாவது:
“‘கூலி’ படத்தின் கடைசி இரண்டு ஷெட்யூட்டுகளின் போது, ரஜினி சார் தனது சுயசரிதையை எழுதுவதில் ஆழமாக ஈடுபட்டிருந்தார். தினமும் அந்த எழுதும் வேலையில் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு இருந்தார். எந்த பகுதியை தற்போது எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் கேட்டால், அவர் ‘இந்த வயதில் இதெல்லாம் நடந்தது’ எனக் கூறுவார். அவருடைய வாழ்க்கைப் பயணம் எவ்வளவு தடைகளை தாண்டி இந்த உயரத்துக்கு வந்திருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.”
மேலும், இந்த பேட்டியில், ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்த பிறகு, ரஜினி ஓய்வெடுத்து, தனது சுயசரிதையை முழுமையாக முடிக்க திட்டமிட்டு உள்ளார் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.